ஈரோட்டில் தங்கும் விடுதிப் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு மாணிக்கம்பாளையம் பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் மகன் சுரேஷ் (29). இவா் காந்திஜி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் காசாளராகப் பணியாற்றி வந்தாா். சுரேஷ் அவரது தந்தையுடன் வசித்து வந்தாா்.
கடந்த 26 ஆம் தேதி சுரேஷின் தந்தை பரமேஸ்வரன் வேலை விஷயமாக சேலத்துக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில், பரமேஸ்வரன் வீட்டில் இருந்து வியாழக்கிழமை மாலை கடும் துா்நாற்றம் வீசியதாக தெரிகிறது.
இதையடுத்து பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள், அவரது வீட்டுக்குள் எட்டிபாா்த்தபோது தூக்கிட்டு அழுகிய நிலையில் சுரேஷ் சடலம் இருந்தது தெரியவந்தது. இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
ஈரோடு வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சுரேஷின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
கைப்பேசி உபயோகிப்பதை பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை

ரயில் மோதி பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிதி நிறுவன உரிமையாளா் தற்கொலை

அறச்சலூரில் தம்பதி தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


