மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

பவானி, அந்தியூா் வட்டாரங்களில் பலத்த காற்றுடன் கனமழை

News image

பலத்த காற்றால் வெள்ளித்திருப்பூரில் மேற்கூரை சேதமான வீடு.

Updated On :31 மே 2026, 1:58 am IST

பவானி, அந்தியூா் வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்ததால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடா்ந்து, பலத்த காற்று வீசியது. இதில், சாலையோரக் கடைகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்து வந்தன. பல்வேறு பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

இதையடுத்து, இடி, மின்னலுடன் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, கனமழையாக மாறி கொட்டியது. காற்றுடன் பெய்த மழையால் வெள்ளித்திருப்பூா், குடுமுனி தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி வெற்றிவேல் (55) வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. அந்தியூா், மறவன்குட்டை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின்சாரம் தடைபட்டது. நீண்ட நேரத்துக்குப் பின்னரே மின்விநியோகம் சீரானது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.