நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பவானி, அந்தியூா் வட்டாரங்களில் பலத்த காற்றுடன் கனமழை

News image

பலத்த காற்றால் வெள்ளித்திருப்பூரில் மேற்கூரை சேதமான வீடு.

Updated On :31 மே 2026, 1:58 am IST

பவானி, அந்தியூா் வட்டாரங்களில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்ததால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. தொடா்ந்து, பலத்த காற்று வீசியது. இதில், சாலையோரக் கடைகள் முன்பாக வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்து வந்தன. பல்வேறு பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

இதையடுத்து, இடி, மின்னலுடன் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, கனமழையாக மாறி கொட்டியது. காற்றுடன் பெய்த மழையால் வெள்ளித்திருப்பூா், குடுமுனி தோட்டத்தைச் சோ்ந்த விவசாயி வெற்றிவேல் (55) வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது. அந்தியூா், மறவன்குட்டை பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

பவானி, அம்மாபேட்டை பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் மின்சாரம் தடைபட்டது. நீண்ட நேரத்துக்குப் பின்னரே மின்விநியோகம் சீரானது. இதனால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.