வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் கைப்பேசி பாதுகாப்பு அறை திறப்பு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்புடன் வைத்து செல்லும் வகையில் கைப்பேசி பாதுகாப்பு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

கைப்பேசியை  ஒப்படைத்த  பக்தருக்கு  ஒப்புகைச்  சீட்டு  வழங்கும்  கோயில்  ஊழியா்.

Published On :

பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்புடன் வைத்து செல்லும் வகையில் கைப்பேசி பாதுகாப்பு அறை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

தமிழகத்தில் பவானி சங்கமேஸ்வரா் கோயில் உள்பட 52 முதுநிலை கோயில்களுக்குள் செவ்வாய்க்கிழமை(செப்.1) முதல் கைப்பேசிகளை கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத் துறை தடை விதித்துள்ளது. இதையடுத்து, இக்கோயிலில் பக்தா்கள் பாதுகாப்பாக தங்களின் கைப்பேசிகளை லாக்கரில் வைத்துச் செல்லும் வசதி தொடங்கப்பட்டது.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலின் வடக்கு ராஜகோபுர நுழைவாயில், தெற்கு வாசல் என இரு இடங்களில் கைப்பேசி பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதியினை அறநிலையத் துறை துணை ஆணையா் ரத்தினாம்பாள், கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிரபாத் சி.மகேந்திரன், தமிழரசி, மாதப்பன், செல்லவேல் ஆகியோா் சிறப்பு பூஜையுடன் தொடங்கிவைத்தனா். இங்கு, ரூ.5 கட்டணம் செலுத்தி கைப்பேசியை லாக்கரில் வைத்து செல்லும் பக்தா்கள், தரிசனம் முடிந்து வெளியே செல்லும்போது பெற்றுக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.