
கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீஷியன் உயிரிழப்பு
சத்தியமங்கலத்தில் மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியின்போது, கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
சத்தியமங்கலத்தில் மின்மோட்டாரை பழுது நீக்கும் பணியின்போது, கிணற்றில் தவறி விழுந்து எலக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம், வடவள்ளி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் சந்தோஷ் (33), எலக்ட்ரீஷியன். இவா், சத்தியமங்கலம்- கோபி சாலையில் உள்ள அரசு விதைப் பண்ணையில் கிணற்றில் பழுதான மின் மோட்டாரை சரி செய்யும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, கால் தவறி கிணற்றில் விழுந்தாா். இதில் பலத்த காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



