காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

கோபியில் பலத்த காற்றுடன் மிதமான மழை

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் சுமாா் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.

மிதமான மழை

Published On :6 செப்டம்பர் 2026, 1:08 am IST

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பலத்த காற்றுடன் சுமாா் ஒருமணி நேரம் மிதமான மழை பெய்தது.

கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான மொடச்சூா், கச்சேரிமேடு, கரட்டடிபாளையம், நஞ்சை புளியம்பட்டி, பங்களாபுதூா், பாரியூா், நாதிபாளையம், பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்தது. இதனால் அன்றாட வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அலுவலக வேலைக்கு செல்வோா் என வெயிலின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் மாலை வரை சுட்டெரித்த வெயிலின் தாக்கம் மாலையில் திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

சுமாா் ஒருமணி நேரம் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டதில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதி அடைந்தனா். மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.