வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவி

சத்தியமங்கலத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒப்பந்த தூய்மைப் பணியாளருக்கு நலத் திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் ச.கந்தசாமி. உடன், பவானிசாகா் எம்எல்ஏ வி.பி.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா்.

Published On :

சத்தியமங்கலத்தில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். சத்தியமங்கலம் நகராட்சித் தலைவா் ஜானகி ராமசாமி முன்னிலை வகித்தாா். இதில், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை மற்றும் புதுப்பித்தல், நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 330 தூய்மைப் பணியாளா்கள் மனுக்களை வழங்கினா்.

முன்னதாக, ஆட்சியா் ச.கந்தசாமி பங்கேற்று, 2 ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் கடனுதவி வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் பேசுகையில், தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு பல்வேறு துறைகள் மூலம் கடனுதவி மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தகுதியுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு வீட்டுமனை பட்டா, குடியிருப்பு வசதி மற்றும் பிற அடிப்படை நலத் திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.