/

கோத்தகிரியில் திமுகவினர்ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கோத்தகிரி அரவேணு பகுதியில்  திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Updated On :5 ஏப்ரல் 2018, 6:55 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கோத்தகிரி அரவேணு பகுதியில்  திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் கதர் வாரியத் துறை  அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கோத்தகிரி ஒன்றியச் செயலாளர் எக்ஸ்போ செந்தில், கீழ்கோத்தகிரி ஒன்றியச் செயலாளர் சிவகுமார், பேரூராட்சி  கழகச் செயலாளர் போஜன், முன்னாள் ஒன்றியச் செயலாளர் வீரபத்திரன், தலைமை பொதுக் குழு உறுப்பினர்கள் பீமன், ராஜு, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மேலும், நிர்வாகிகள் கண்ணம்மாள், ராஜகுமாரி, ஸ்டுடியோ செல்வம், காங்கேயன், சந்திரசேகர், நடேசன், கருணாநிதி, தங்கவேல், மணிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.  
இதே போல் கூடலூரில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.