விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

குன்னூர் - உதகை சாலையில் ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் புதன்கிழமை  ராட்சத மரம்  விழுந்ததில்  2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:55 am IST

குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் புதன்கிழமை  ராட்சத மரம்  விழுந்ததில்  2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக  பலத்த  மழை பெய்தது. 
இந்நிலையில் குன்னூர் -  மேட்டுப்பாளையம்   சாலையின் குறுக்கே  செவ்வாய்க்கிழமை  மரம் விழுந்ததால் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  
தீயணைப்புத்  துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் இணைந்து  மரத்தை  அகற்றி  போக்குவரத்தை  சீர் செய்தனர்.
இந்நிலையில்,  குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் புதன்கிழமை  இரவு விழுந்தது.  அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால்  2  மணி நேரத்திற்கும் மேலாக  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றியப் பின் போக்குவரத்து சீரானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.