பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பொக்காபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞர் சாவு

கூடலூரை அடுத்துள்ள பொக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:52 pm

DIN

கூடலூரை அடுத்துள்ள பொக்காபுரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், மேல் கூடலூர், ஓ.வி.எச்.சாலையில் வசிக்கும் ராஜேந்திரனின்  மகன் பிரேம்குமார் (28). இவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பொக்காபுரம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். தொட்டலிங்கி என்னுமிடத்தில் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பிரேம்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மசினகுடி அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக கொண்டு சென்றனர். அதற்குள் அவர் இறந்துவிட்டார்.  அவருடன் சென்ற தொரப்பள்ளியைச் சேர்ந்த பிரவீண் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தச் சம்பவம் குறித்து மசினகுடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.