சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தோடர் இன மக்கள் எஸ்.பி.யிடம் புகார் மனு

உதகையில்  நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது  தோடர் இன

Updated On :25 டிசம்பர் 2018, 5:55 am IST

உதகையில்  நடைபெற்ற தோடர் இன மக்களின் ஸ்ரீபவானிஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின்போது  தோடர் இன மக்களைத் தகாத வார்த்தைகளால் பேசிய நகர மத்திய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
உதகையில் தோடர் இன மக்களின் குல தெய்வமான ஸ்ரீ பவானிஸ்வரர் திருக்கோயிலின் 107ஆம் ஆண்டு ஆருத்ரா தரிசன மகா உற்சவப் பெருவிழா  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக பவானீஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. 
இந்நிலையில்,  தேரோட்டத்தின்போது காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும், தங்களை காவல் துறையினர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறி காவல் துறையினரிடம் தோடர் இன மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, தோடர் இன மக்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளால் பேசிய காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரியும்,  தோடர் இன மக்களிடம் அவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறியும்  மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா,  மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தோடர் இன மக்களைக் கலந்தாலோசித்து அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தோடர் இன மக்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.