கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என ஏஐடியூசி வலியுறுத்தி உள்ளது.
குந்தா தாலுகா ஏஐடியூசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் மஞ்சூரில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரி தலைமை வகித்தார்.
இதில், தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியம் உள்பட தொழிலாளர்களின் நலனுக்காக அரசால் பல்வேறு நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ள தொழிலாளிக்கு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
எனவே, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் உடனடியாக பதிவுசெய்ய வேண்டும். சங்கத்தின் சார்பில் கட்டுமானத் தொழிலாளர் சந்திப்பு இயக்கம் ஜூலை 30 ஆம் தேதி வரை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








