விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கெரடாலீஸ் கிராமத்தில் 20 நாள்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Updated On :23 ஜூலை 2018, 7:49 am IST

மஞ்சூர் அருகே கெரடாலீஸ் கிராமத்தில் 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
மஞ்சூர் அருகே மேலூர் ஊராட்சிக்குள்பட்ட கெரடாலீஸ் கிராமத்தில் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமம் அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. 
இக்கிராமத்துக்கு மஞ்சக்கம்பை கிராமப் பகுதியில் உள்ள ஓடையில் இருந்து குழாய்கள் மூலம் நீர் எடுத்துவரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு ஓடையில் இருந்து வரும் குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்தன. 
உடைந்த குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக கிராம மக்கள் ஊராட்சி பணியாளர்களிடம் கேட்டபோது,  உடைந்த குழாய்களை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் உதிரிபாகங்கள் வாங்கித் தரவில்லை எனக் கூறியுள்ளனர். 
இதனால் கெரடாலீஸ் கிராம மக்கள் 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து கெரடாலீஸ் கிராமத்தைச் சேர்ந்த கலைக்குமார் கூறுகையில், எங்கள் கிராமத்துக்கு 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை.
இதனால் கிராம மக்கள் சுமார் 1 கி.மீ நடந்து சென்று குடிநீர் எடுத்து வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு ஏற்படுத்தவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.