தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மஞ்சூர் பகுதியில் அபாயகரமான மரங்கள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 

Updated On :23 ஜூலை 2018, 7:48 am IST

மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள அபாயகரமான மரங்கள் அகற்றுவதற்கான கணக்கெடுக்கும் பணி துவங்கியது. 
மஞ்சூரில் இருந்து உதகை, குன்னூர், கோரகுந்தா, மேல்பவானி,  கிண்ணக்கொரை, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பட்டுப் போய் காணப்படுகின்றன. இதனால், காற்று, மழைக் காலங்களில்  மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் வாடிக்கையாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பாதிக்கின்றனர். 
இந்நிலையில்,  அண்மையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் கிண்ணக்கொரை, குந்தாபாலம், கோரகுந்தா, மேல்பவானி, சாம்ராஜ் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து மஞ்சூர் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலையோரங்களில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்கள் குறித்து ஆய்வு செய்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். 
இந்நிலையில் குந்தா வருவாய்த் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மஞ்சூர்-உதகை சாலையில் குந்தா பாலம் பகுதியில் ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
குந்தா பாலம் முதல் கைகாட்டி வரையிலான 100-க்கு மேற்பட்ட மரங்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.