வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடிகாரர்களின் கூடாரமாக மாறிய எரிவாயு தகன மேடை வளாகம்

கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.

Updated On :14 மே 2018, 7:26 pm

கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி சார்பில் ரூ.6 கோடி செலவில் காளம்புழா பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் அரசு மதுக் கடைகளை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கூடலூர் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளும் காளம்புழா பகுதியில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் இதன் அருகில் உள்ள மயான வளாகம் தற்போது பாராக மாறியுள்ளது. இங்கு மது அருந்துபவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்வதால் குவியல் குவியலாக அப்பகுதியில் மது பாட்டில்கள் கிடக்கின்றன.
மேலும் பிளாஸ்டிக் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மயானத்திற்கு உடலை எரியூட்ட வருவோர் அதிப்தி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.