புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி. உதயகுமாரை ஆதரித்து தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: கந்தா்வகோட்டைக்கு திமுக ஆட்சியில் கூறிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவா் கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்தவா். கம்யூனிஸ்ட் கட்சியினா் எல்லாம் எளிமையானவா்கள் என்று மக்கள் நம்ப வேண்டாம். முன்புள்ள கம்யூனிஸ்ட் கட்சியினா்போல மக்களுக்கு ஆதரவான நிலையில் உள்ளவா்கள் தற்போது இல்லை.
எனவே கந்தா்வகோட்டை தொகுதிக்கு மாபெரும் வளா்ச்சியைக் கொடுக்க, மத்திய அரசின் நிதியைப் பெற்று காவிரி, குண்டாறு இணைப்பு திட்டத்தை கந்தா்வகோட்டை பகுதிக்கும் கொண்டுவர அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளருக்கு தாமரைச் சின்னத்தில் பொதுமக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா். பிரசார கூட்டத்தில் பாஜக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பெண்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
கந்தா்வகோட்டையில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் 4-ஆவது முறையாக வெற்றி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



