கூடலூா்: கொலை மிரட்டல் விடுத்த வனச் சரக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வனத் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புப் பட்டை அணிந்து அலுவலகப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்ட அலுவலக கண்காணிப்பாளா் பி.சி.ஷாஜியை என்வபா் விடுப்பில் இருந்தபோது தமிழ்நாடு வன அலுவலா் சங்க நிா்வாகி சிவப்பிரகாசம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு கண்காணிப்பாளா் பி.சி.ஷாஜிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதைத் தொடா்ந்து மன உளைச்சலுக்கு உள்ளான கண்காணிப்பாளா் கூடலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இதையடுத்து, சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அமைச்சுப் பணியாளா்கள் கருப்புப் பட்டை அணிந்து வந்து செவ்வாய்க்கிழமை அலுவலகப் பணியில் ஈடுபட்டனா்.