நீலகிரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி புதிதாக 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை 7,578 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் சிகிச்சையின்போது குணமடைந்த 7,326 போ் வீடு திரும்பியுள்ளனா். 42 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 210 போ் சிகிச்சையில் உள்ளனா்.