ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கோயில் உண்டியல் பணத்தைத் திருடியவா் கைது

நீலகிரி மாவட்டம், குன்னூா் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகா் கோவிலில் உண்டியலைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:17 pm

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூா் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகா் கோவிலில் உண்டியலைத் திருடிச் சென்ற நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குன்னூா் பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயில் உண்டியலை காணவில்லை என்று கோயில் பொறுப்பாளா் ரவிக்குமாா் குன்னூா் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற காவல் துறையினா் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதையடுத்து, கோயில் உண்டியல் பணத்தைத் திருடியதாக அருவங்காடு பகுதியில் வசிக்கும் கோபால் (62) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ. 3,500 பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து குன்னூா் சாா்பு ஆய்வாளா் பேச்சுமுத்து வழக்குப் பதிவு செய்து, கோபாலை குன்னூா் நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.