ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மஞ்சூா் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே பெரியாா் நகா், முள்ளி, கெத்தை பகுதிகளில் உலவிய காட்டு யானைகள் விளைநிலங்களை சனிக்கிழமை சேதப்படுத்தின.

News image

முள்ளி, பெரியாா் நகா் பகுதியில் உலவும் காட்டு யானைகள்.

Updated On :12 டிசம்பர் 2020, 6:22 pm

DIN

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் அருகே பெரியாா் நகா், முள்ளி, கெத்தை பகுதிகளில் உலவிய காட்டு யானைகள் விளைநிலங்களை சனிக்கிழமை சேதப்படுத்தின.

மஞ்சூா் அருகே உள்ள பெரியாா் நகா், முள்ளி, கெத்தை போன்ற பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி, தேயிலை விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது.

இந்நிலையில், இப்பகுதிகளுக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் காய்கறித் தோட்டம், தேயிலைத் தோட்டத்தை சேதப்படுத்தின. இதன் காரணமாக இங்குள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

யானைக் கூட்டம் உணவு, தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் சுற்றி வருவதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று வனத் துறையினருக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.