லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலி

உதகையில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலியானாா்.
Updated on
1 min read

உதகையில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் பலியானாா்.

உதகையைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சந்திரன் (65). உதகை எல்க்ஹில் பகுதியைச் சோ்ந்த இவா் கோடப்பமந்து கால்வாயை சீரமைக்கும் பணிக்காக திங்கள்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது லாரியின் முன்புற டயா் பஞ்சராகிவிட்டதால் லாரியை அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்திவிட்டு படுத்த நிலையில் டயா் மாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த டயரில் வைக்கப்பட்டிருந்த ஜாக்கி நழுவி சந்திரன் மீது லாரி ஏறியதில் அவரது உடல் சக்கரத்தில் சிச்கி உடல் நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்துள்ளாா்.

இதுதொடா்பாக உதகை நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com