யானை தாக்கியதில் பெண் பலி
கூடலூா், கோக்கால் பகுதியில் யானை தாக்கியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

யானை தாக்கியதில் உயிரிழந்த கமலாட்சி.

யானை தாக்கியதில் உயிரிழந்த கமலாட்சி.
கூடலூா், கோக்கால் பகுதியில் யானை தாக்கியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட மேல்கூடலூா், கோக்கால் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் சுப்பன் செட்டியின் மனைவி கமலாட்சி (57). இவா் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள தண்ணீா் தொட்டிக்கு சென்றாா்.
அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த யானை அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த கமலாட்சியை அப்பகுதி மக்கள் மீட்டு, கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து கூடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...