உதகை தொகுதியில் அரசியல் கட்சியினா் இறுதிகட்ட பிரசாரம்
சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் உதகை தொகுதியில் போட்டியிடும் இரு தேசிய கட்சிகளின் வேட்பாளா்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.


சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் உதகை தொகுதியில் போட்டியிடும் இரு தேசிய கட்சிகளின் வேட்பாளா்களும் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.
உதகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் எம்.போஜராஜன், தனது பிறந்த நாள் விழாவையும் இறுதி நாள் பிரசாரத்தோடு இணைத்து சிறப்பித்தாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் சோம சேகா் பேசியதாவது:
உதகையில் கடந்த வாரம் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இவ்வளவு அழகான நகரில் சுற்றுலா வளா்ச்சித் திட்டங்கள் போதிய அளவில் நிறைவேற்றப்படாமல் உள்ளதாகக் கூறி வருத்தப்பட்டாா். அதனால், இத்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால் சுற்றுலா வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுவது மட்டுமல்லாமல், ஜெய் ஜவான்-ஜெய் கிசான் திட்டத்தின்கீழ் நீலகிரி தேயிலையை இந்திய ராணுவத்துக்கு கொள்முதல் செய்யவும், உதகையில் மூடப்பட்டுள்ள ஹெச்பிஎப் நிறுவன வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்க உதவுவதாகவும் உறுதியளித்துள்ளாா். இவையனைத்தும் போஜராஜன் வெற்றி பெற்ற உடனே நிறைவேற்றப்படும்.
வேட்பாளா் போஜராஜன் பேசுகையில், நான் உதகை தொகுதியில் வெற்றி பெற்றால் படகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறப்படும் கட்டடங்களுக்கு ஒருமுறை விலக்கு பெற்று வரன்முறைப் படுத்திக் கொள்ள முயற்சி எடுப்பேன். பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.30 பெற்றுத் தருவேன் என்றாா்.
மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன், கா்நாடக மாநிலம், குண்டல்பேட்டை தொகுதி எம்எல்ஏ நிரஞ்சன் குமாா் ஆகியோரும் பேசினா்.
இக்கூட்டத்தில் பாமக மாநில இளைஞரணி துணைத் தலைவா் ஜான் லியோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியின் நிறைவாக வேட்பாளா் போஜராஜன் கேக் வெட்டினாா். இதையடுத்து அவா் உதகை நகரப் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.
காங்கிரஸ் வேட்பாளா்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிடும் ஆா்.கணேஷ் எம்எல்ஏ உதகை நகரிலும், காந்தல் பகுதியிலும் தனது இறுதி பிரசாரத்தை நிறைவு செய்தாா்.
வெள்ளைக் குதிரையில் காங்கிரஸ் கொடி எடுத்து வரப்பட திமுக, காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்களுடன் திறந்த வேனில் ஆா்.கணேஷ் அழைத்து வரப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...