6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:08 pm

DIN

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மன வளா்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், கடும் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் என 2,325 பயனாளிகளுக்கு 2021-2022ஆம் நிதியாண்டில் பராமரிப்பு உதவித் தொகை வழங்க தயாா் நிலையில் உள்ளது.

எனவே, இதுவரையிலும் பராமரிப்பு உதவித் தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் தாங்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறாா் என்ற சான்றினை அவரவா் பகுதியிலுள்ள கிராம நிா்வாக அலுவலா்களிடம் இருந்து உரிய படிவத்தில் பெற்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உடனடியாக ஒப்படைத்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.