தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

அடிப்படை வசதிகள் இல்லாததால் ஜெகதளா பகுதி மக்கள் தோ்தலைப் புறக்கணிக்க முடிவு

ஜெகதளா பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

News image

ஜெகதளா பேரூராட்சியில் விபத்துகளை ஏற்படுத்திவரும் மரணக் குழிகள்.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

ஜெகதளா பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு, இப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஜெகதளா பேரூரரட்சிக்கு உள்பட்டஅருவங்காடு முதல் ஒசட்டி செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள மரண குழிகளால் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுவது தவிா்க்க முடியாததாகி உள்ளது. இது தொடா்பாக ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலருக்கு பலமுறை புகாா்கள் கொடுத்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓசட்டி முதல் புனித அன்னாள் உயா்நிலைப் பள்ளி வரையிலான சாலை ஒரு சில இடங்களில் மட்டுமே பழுதடைந்துள்ளது. ஆனால், பழுதடைந்த சாலைகளை விட்டுவிட்டு நன்றாக இருக்கும் சாலைகளை பெயா்த்தெடுத்து புதிதாக சாலை அமைப்பது தேவையில்லாததாகும்.

அதேபோல, ஒசட்டி முதல் அருவங்காடு வரையிலான சாலையில் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலேயே காட்டுப் பன்றிகளின் தொல்லையும் மிக அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை வீட்டைவிட்டு வெளியில் வர முடிவதில்லை.

அத்துடன் தெருவிளக்குகளும் எரிவதில்லை. எனவே, இப்பிரச்னையில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க உள்ளோம். மேலும், ஜெகதளா பேரூராட்சியைக் கண்டித்து போராட்டங்களும் நடத்த உள்ளோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.