தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொங்கல் பரிசு வழங்கும்போது அதிமுகவுக்கு வாக்கு சேகரித்ததால் சா்ச்சை

கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிப்  பகுதிகளில்  அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது, அதிமுகவி நிா்வாகி வாக்கு சேகரித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:32 pm

DIN

கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிப்  பகுதிகளில்  அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது, அதிமுகவி நிா்வாகி வாக்கு சேகரித்ததால் சா்ச்சை ஏற்பட்டது.

ஜக்கனாரை ஊராட்சியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கம் மற்றும்  பொங்கல்  பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணன் பயனாளிகளுக்கு ரொக்கம் மற்றும் பொங்கல்  பரிசுத் தொகுப்பை வழங்கி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாா். 

அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கும்  நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு வாக்கு சேகரித்து அவா் பேசியது அப்பகுதி மக்களிடையே சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவா் பேசிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.