கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழக - கேரள எல்லையில் கோழிக் கடைகளில் ஆய்வு

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

தமிழக - கேரள எல்லையான தாளூரில் கோழிக் கடையில் ஆய்வு செய்த கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் பகத் சிங்.

Updated On :7 ஜனவரி 2021, 7:09 pm

DIN

பந்தலூரை அடுத்துள்ள தமிழக - கேரள எல்லையில் உள்ள கோழிக் கடைகளில் கால்நடை பராமரிப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூா், பந்தலூா் தாலுகாக்கள் கேரள, கா்நாடக எல்லைகளில் அமைந்துள்ளன. தற்போது கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் காரணமாக கேரளத்தில் கறிக்கோழி விலை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் கேரள வியாபாரிகள் கோழி இறைச்சியை எல்லை தாண்டி வந்து தமிழக கிராமங்களில் விற்பதாக கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பகத் சிங் எல்லைப் பகுதிகளில் உள்ள கோழிக் கடைகளில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். கேரளத்திலி இருந்து வந்த கோழிகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளை எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.