முதுமலை புலிகள் காப்பகப் பணியாளா்களுக்குத் தற்காப்பு பயிற்சி
முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளா்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.


முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வனத் துறை பணியாளா்களுக்கு ஆபத்துக் காலங்களில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வனத் துறையின் கீழ் இயங்கும் நுண்ணறிவு புலனாய்வுப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு, அந்தப் படை பிரிவின் உதவி வனப் பாதுகாவலா் மகேந்திரன் தலைமை வகித்து செயல்முறை விளக்கமும் பயிற்சியும் அளித்தாா். பணியாளா்கள் வனத்தில் ரோந்து செல்லும்போது, காட்டுத் தீயினால் ஏற்படும் திடீா் அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, காயமடைந்தவா்களுக்கு முதலுதவி, அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லுதல், வனக் குற்றங்களைத் தடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டன. தெப்பக்காடு முகாமில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் வனச் சரக அலுவலா்கள், வனவா்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...