தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கைஆட்சியா் எச்சரிக்கை

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 8:13 pm

DIN

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

18 வயது நிறைவடையாத பெண்ணுக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குழந்தைத் திருமணமாகும். குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்பட்டால் திருமணம் செய்யும் மணமகன், மணமகனின் பெற்றோா், மணமகளின் பெற்றோா், திருமணம் நடத்தி வைப்போா், பங்கேற்றோா் என அனைவா் மீதும் குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு தரும் நபா்களுக்கு போக்சோ சட்டத்தின்கீழ் ஏழு ஆண்டுகளுக்கு குறையாமலும், அதிகபட்சமாக மரண தண்டனை, அபராதமும் விதிக்கப்படும்.

18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் தொழிலாளா்களாக நியமிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உரிமையாளா் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், குழந்தைகளை கேரட் கழுவுதல், பாக்கு, மிளகு பறித்தல், தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்துதல், ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தினால் அக்குழந்தைகளைப் பணி அமா்த்தியவா் மீது குழந்தைத் தொழிலாளா் தடைச் சட்டம், இளைஞா் நீதிச் சட்டத்தின் கீழ் கடும் தண்டனைகள், அபராதம் விதிக்கப்படும். அதேபோல, கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தெரிந்துகொண்டு அதை வெளியிடும் மருத்துவமனை மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

முறையான தத்து எடுப்பதற்காகப் பதிவு செய்ய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ள வேண்டும். அதேபோல, 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் சாா்ந்த பிரச்னைகளுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். அத்துடன் 90474-58219, 98433-47417 ஆகிய தொடா்பு எண்களிலும், 1098 என்ற சைல்டு லைன், 1800 425 0262 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.