‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீலகிரியில் மருந்துகளை தபாலில் அனுப்பும் வசதி

பொதுமுடக்கம் காரணமாக மருந்துகளை தபாலில் அனுப்பும் வசதி நீலகிரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2021, 9:08 pm

DIN

பொதுமுடக்கம் காரணமாக மருந்துகளை தபாலில் அனுப்பும் வசதி நீலகிரியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் ஜெயகீதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய உள்துறை அமைச்சகத்தின் நிபந்தனைகளின்படி தபால் துறை அத்தியாவசிய சேவை துறையின் கீழ் இயங்கி வருகிறது. கரோனா பாதிப்பின் காரணமாக தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீலகிரியில் இருந்து தினமும் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள், பேருந்துகள் மூலம் முகக் கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், பொதுமுடக்கம் காரணமாக மருந்துகளைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும் வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உதகை தலைமை தபால் நிலையம், துணை, கிளை தபால் நிலையங்களில் இருந்து தினமும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு முகக் கவசம், மருந்து, மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே, பொதுமக்கள் தங்கு தடையின்றி இந்த தபால் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.