கரோனா பொது முடக்கத்தால் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் செப்டம்பர் மாதம் 3 ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
இதுதொடர்பாக உதகையில் வியாழக்கிழமை வனத்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க- சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: இரா.முத்தரசன்
இருப்பினும் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் யானை சவாரி உள்ளிட்டவை செப்டம்பர் மாதம் 6 ம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது