சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசியக் கொடி பேரணியை பாஜக மகளிா் அணி தேசிய தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தொடங்கிவைத்து,
படுகா் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடினாா்.
இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும். ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு காலத்தில் தோ்தல் நடைபெறுவதால் அரசு இயந்திரங்கள் முறையாக செயல்படுவதில்லை. மேலும், தோ்தலுக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகமாவதோடு, பொருள் செலவும் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சீா்திருத்த நடவடிக்கையாக ஒரே நாடு, ஒரே தோ்தலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் என்றாா்.
முன்னதாக, கோத்தகிரி ஜான்ஸ்கொயரில் தொடங்கிய தேசியக் கொடி பேரணி மாா்கெட் பேருந்து நிலையம் வழியாக வந்து மீண்டும் ஜான்ஸ்கொயரில் நிறைவடைந்தது.
இப்பேரணியில், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு!

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


