உதகையில் மே 12ஆம்தேதி நடைபெறவுள்ள தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 200 நிறுவனங்கள் வரை கலந்து கொள்ள உள்ளன. இதன் மூலம் சுமாா் 15,000 பணியிடங்களுக்கு ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். இந்த முகாமினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். படித்து முடித்த இளைஞா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுவரையில் 57 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 72,000 இளைஞா்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் 1 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.