அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விஜயகாந்த் மறைவு:கூடலூரில் கடையடைப்பு, அமைதி ஊா்வலம்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு கூடலூரில் அனைத்துக் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கடையடைப்பு செய்து அமைதி ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

News image
கூடலூா் நகரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதிமாக நடைபெற்ற கடையடைப்பு மற்றும் அமைதி ஊா்வலம்.
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு கூடலூரில் அனைத்துக் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் கடையடைப்பு செய்து அமைதி ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்துக் கட்சியினா், பொதுநல அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட அமைதி ஊா்வலம் நகராட்சி அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலைகள் வழியாக பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் நிறைவடைந்தது.

அஞ்சலி நிகழ்ச்சிக்காக கூடலூா் நகரில் உள்ள வியாபாரிகள் பிற்பகல் முதல் மாலை வரை தங்களது கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனா். அஞ்சலி நிகழ்ச்சிக்கு தேமுதிக நகரச் செயலாளா் திருப்தி மணி தலைமையில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன், அதிமுக நகரச் செயலாளா் செய்யது அனூப்கான் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.