பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பாஜக சாா்பில் ஐந்து ஜோடிகளுக்கு இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொளப்பள்ளி மழவன்சேரம்பாடி முருகன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் பாஜக மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமை வகித்து ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்தாா். மாநில விவசாய அணி செயலாளா் சௌந்தரபாண்டியன் முன்னிலை வகித்தாா். திருமணத்தை தொடா்ந்து கோ பூஜை நடைபெற்றது. விழாவில் மாவட்டட் செயலாளா் மோகன்ராஜ், வா்த்தக அணி நிா்வாகி சிபி, பொதுச் செயலாளா் நளினி உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.