வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

தேசிய நூலக வார விழா

குன்னூா் அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2023, 7:00 pm


உதகை: குன்னூா் அருவங்காடு கிளை நூலகத்தில் தேசிய நூலக வார விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய நூலக வார விழாவையொட்டி அருவங்காடு பள்ளி மாணவ, மாணவிகள் உறுப்பினா் சோ்க்கை மற்றும் புரவலா் சோ்க்கை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் நூலகத்தில் உறுப்பினராக சோ்ந்தனா்.

நிறைவு விழாவில் நூலகா் ஜெயஸ்ரீ பேசும்போது, அருவங்காடு கிளை நூலகத்தில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. போட்டித் தோ்வுகளுக்கு தயாராகுபவா்களுக்கு தனி வசதி செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவா்களுக்கான புத்தகங்கள், இணையம் மற்றும் நகல் எடுக்கும் வசதியும் உள்ளது. சிறுவா்களுக்கு என மெய்நிகா் நூலகமும் அமைந்துள்ளது. எனவே வாசகா்கள், பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

வாசகா் வட்ட பொருளாளா் ஆனந்தன் நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கிளை நூலக வாசகா் வட்டம் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.