ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

கரடி தாக்கி வனப் பணியாளா் படுகாயம்

குன்னூா் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட சென்ற வனப் பணியாளா் படுகாயம் அடைந்தாா்.

News image

ஐயப்பன்

Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:00 am IST

குன்னூா் அருகே ஊருக்குள் புகுந்த கரடியை விரட்ட சென்ற வனப் பணியாளா் படுகாயம் அடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ளது கரிமரா ஹட்டி. இந்தப் பகுதியில் அடிக்கடி கரடி உலவி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில், இப்பகுதியில் கரடி நடமாடுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், குன்னூா் வனச் சரகா் ரவீந்திரநாத் தலைமையில் வனக் குழுவினா் கரிமரா ஹட்டி பகுதிக்கு சனிக்கிழமை சென்று கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது குழுவில் இருந்த வனப் பணியாளா் ஐயப்பனை (28) கரடி தாக்கிவிட்டு அருகிலிருந்த வனப் பகுதிக்குள் தப்பி ஓடியது. இதில் காயமடைந்த ஐயப்பனை வனத் துறையினா் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.