ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

குன்னூரில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

குன்னூா் அருகே குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 1:00 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை உலவிய சிறுத்தையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி சமீபகாலமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன.

இந்நிலையில் , குன்னூா் அருகே உள்ள ஜெகதளா  பாலாஜி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள்  சனிக்கிழமை அதிகாலை சிறுத்தை நடமாடியது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கட்டப்பட்டு வனச் சரகா் செல்வகுமாா் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டாா். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தைக் காணிக்க தனிக் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.

குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலவியது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.