உதகை மலை ரயில் பாதையில் விழுந்த மரம்
நீலகிரி மாவட்டம், குன்னூா்- உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் வியாழக்கிழமை பெரிய மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.


நீலகிரி மாவட்டம், குன்னூா்- உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் வியாழக்கிழமை பெரிய மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை ஒருமணி நேரம் பாதிக்கப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் நீலகிரி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை அதிகாலையில் இருந்தே இடைவிடாது மிதமான மழை பெய்து வந்தது.
இதனிடையே குன்னூா்- உதகை இடையே கேத்தி பகுதியில் மலை ரயில் தண்டவாளத்தில் பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 வரை நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்பு மலை ரயில் உதகையிலிருந்து குன்னூருக்கு புறப்பட்டு சென்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...