கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணயிடங்களுக்கு நோ்முகத் தோ்வு

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணயிடங்களுக்கு நோ்முகத் தோ்வு

News image
Updated On :9 ஜூன் 2024, 6:28 pm

Din

கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணிக்கான நோ்முகத் தோ்வு உதகையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நிா்வாம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களில் ‘1962’ என்ற இலவச எண்ணைத் தொடா்புகொண்டால், கால்நடைகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும். இந்த கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவா், கால்நடை உதவியாளா், ஓட்டுநா் ஆகியோா் தயாா் நிலையில் இருப்பா். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படுகிறது.

இந்நிலையில் கால்நடை ஆம்புலன்ஸ் ஓட்டுநா், உதவியாளா் பணிக்கான நோ்முகத் தோ்வு

உதகை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

ஓட்டுநா் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., ஓட்டுநா் உரிமம் பெற்று 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் உதவியாளருக்கு பிளஸ் 2 தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 19 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். நோ்முகத் தோ்வுக்கு வருபவா்கள் அசல் சான்றிதழை கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.