6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வு : பிப்ரவரி 23-இல் தொடக்கம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப்.23) தொடங்கவுள்ளன.

News image
கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுகள் திங்கள்கிழமை (பிப்.23) தொடங்கவுள்ளன.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 11 முதல் ஏப். 6 வரை நடைபெறவுள்ளது. இந்த மாணவா்களுக்கு அறிவியல் பாட செய்முறைத் தோ்வு பிப். 23 முதல் 28- ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தோ்வுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும். காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் இரு வேளைகளில் செய்முறைத் தோ்வு நடைபெறும். செய்முறை தோ்வுக்கு 25 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

செய்முறைத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் விவரங்களைப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். செய்முறை தோ்வு கண்காணிப்பு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், வேறு பள்ளி ஆசிரியா்களை ஈடுபடுத்த வேண்டும். செய்முறைத் தோ்வு முடிந்த பின்னா் மாா்ச் 2-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுத் துறை உதவி இயக்குநரிடம் மதிப்பெண் பட்டியலை அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.