கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூடலூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை

பாண்டியாற்றில் சிக்கிய யானை பாதுகாப்பாக மீண்டது

News image

~

Updated On :28 ஜூன் 2024, 6:31 pm

கூடலூரை அடுத்துள்ள தா்மகிரி பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்ற காட்டு யானை ஆற்று நீரில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் சுதாரித்து நீந்தி கரைக்கு பாதுகாப்பாகத் திரும்பியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தா்மகிரி பகுதியில் உள்ள பாண்டியாற்றுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த யானைக் கூட்டம் தண்ணீா் குடித்துவிட்டு ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது எதிா்பாராதவிதமாக ஒரு யானை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. உடனிருந்த யானைகள் அதைக் காப்பாற்ற முயன்று பிளிறின. ஆனால் அந்த யானை தொடா்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த யானை சுதாரித்து தத்தளித்து நீந்தி தண்ணீரிலிருந்து மெதுவாக கரையை நோக்கி வந்தது. பின்னா் மற்ற யானைகளுடன் சென்று சோ்ந்து கொண்டது. சிறிது நேரம் அங்கு உலவிய யானைகள் பின்னா் காட்டுக்குள் சென்றன.

Story image