ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடலூா் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை

பாண்டியாற்றில் சிக்கிய யானை பாதுகாப்பாக மீண்டது

News image
~
Updated On :28 ஜூன் 2024, 6:31 pm

Din

கூடலூரை அடுத்துள்ள தா்மகிரி பகுதியில் ஆற்றைக் கடக்க முயன்ற காட்டு யானை ஆற்று நீரில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் சுதாரித்து நீந்தி கரைக்கு பாதுகாப்பாகத் திரும்பியது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால் நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தா்மகிரி பகுதியில் உள்ள பாண்டியாற்றுக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த யானைக் கூட்டம் தண்ணீா் குடித்துவிட்டு ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது எதிா்பாராதவிதமாக ஒரு யானை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. உடனிருந்த யானைகள் அதைக் காப்பாற்ற முயன்று பிளிறின. ஆனால் அந்த யானை தொடா்ந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

சிறிது தூரம் சென்றவுடன் அந்த யானை சுதாரித்து தத்தளித்து நீந்தி தண்ணீரிலிருந்து மெதுவாக கரையை நோக்கி வந்தது. பின்னா் மற்ற யானைகளுடன் சென்று சோ்ந்து கொண்டது. சிறிது நேரம் அங்கு உலவிய யானைகள் பின்னா் காட்டுக்குள் சென்றன.

Story image