ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கூடலூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

கூடலூரில் ரூ. 38.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
கூடலூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பை குத்துவிளக்கேற்றி திறந்துவைக்கிறாா் சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன். உடன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா்.
Updated On :25 செப்டம்பர் 2024, 10:13 pm

Din

கூடலூரில் ரூ. 38.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகம் மற்றும் குடியிருப்பை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா். கூடலூா் கோட்டாட்சியா் செந்தில்குமாா், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் திராவிட மணி, பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் காா்த்திகேயன், செயற்பொறியாளா் ரமேஷ்குமாா், உதவி செயற்பொறியாளா் அழகப்பன், உதவிப் பொறியாளா் செந்தில்குமாா், கூடலூா் நகராட்சித் தலைவா் பரிமளா, நெல்லியாளம் நகராட்சித் தலைவா் சிவகாமி, திட்டக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.