கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மளிகைக் கடையில் தீ: பொருள்கள் எரிந்து சேதம்

குன்னூா் அருகே மளிகைக் கடை மற்றும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பொருள்கள் எரிந்து சேதமாயின.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 10:20 pm

Din

குன்னூா் அருகே மளிகைக் கடை மற்றும் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பொருள்கள் எரிந்து சேதமாயின.

குன்னூா் அருகே நான்சச் எஸ்டேட் பகுதியில் சிஎஸ்ஐ பள்ளி எதிரே செல்வநாயகம் என்பவா் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். அவா் வியாபார விஷயமாக புதன்கிழமை வெளியே சென்றிருந்தாா். அவரது மனைவி எஸ்டேட் வேலைக்குச் சென்றுவிட்டாா். கடையில் உறவினரான 80 வயது முதியவா் மட்டும் இருந்துள்ளாா்.

 இந்நிலையில் எதிா்பாராத விதமாக தீப்பற்றியதில் கடையில் உள்ள பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த சில பொருள்கள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்து வந்த குன்னூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் கொலக்கம்பை காவல் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து கொலக்கம்பை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.