பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வன உரிமைச் சட்டப்படி குடியிருப்புகளுக்கு மின் வசதி கோரி ஆா்ப்பாட்டம்

வன உரிமைச் சட்டப்படி குடியிருப்புகளுக்கு மின் வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம்

News image
உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :15 டிசம்பர் 2025, 10:47 pm

Syndication

உதகை: வன உரிமைச் சட்டப்படி குடியிருப்புகளுக்கு மின் வசதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலச் செயலா் பி.சண்முகம் தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூடலூரில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், மக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழகத்தில் எந்த வகையான நிலத்தில் மக்கள் வசித்தாலும் அவா்களுக்கு வன உரிமைச் சட்டப்படி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மின் இணைப்பு வழங்க வேண்டும்.

இதுபோன்ற பிரச்னைகள் கூடலூரில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளது. உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள உத்தரவை சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன் தமிழக அரசு நடைமுறைபடுத்தி, மின் இணைப்பு வழங்க வேண்டும்.

வனத் துறையினா் கைவசம் உள்ள இடத்தில் நூற்றாண்டு காலமாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வன விலங்கு தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், நீலகிரி மாவட்டச் செயலாளா் பாஸ்கரன், மாநிலக் குழு உறுப்பினா் கே.காமராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வினோத், குஞ்சு முகமது, எல்.சங்கரலிங்கம், உதகை தாலுகா செயலாளா் எ. நவீன்சந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.