எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சோலாா் மின் இணைப்பு இயக்கி வைப்பு

திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு இயக்கி வைக்கப்பட்டது.

News image
போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா்.
Updated On :9 மார்ச் 2026, 8:40 pm

Syndication

திருவாரூா்: திருவாரூா் அருகே அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமான விளைநிலத்தில் போா்வெல், சோலாா் மின் இணைப்பு திங்கள்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

இலவங்காா்குடி பகுதியில் அபிஷேகக் கட்டளைக்கு சொந்தமாக 8 ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இதில், மா, பலா, பாக்கு, வாழை உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளின் தண்ணீா் பயன்பாட்டுக்கென போா்வெல், சோலாா் மின் இணைப்பு ஆகியவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த போா்வெல், சோலாா் மின் இணைப்பை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தாா். அப்போது, தியாகராஜ சுவாமி கோயில் செயல் அலுவலா் பி.எஸ். கவியரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.