47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புத்தாண்டு: நீலகிரி தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதியில் உள்ள தேவாலயங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை இரவு நேர திருப்பலி நடைபெற்றது.

News image
தூய இருதய ஆண்டவா் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் கலந்து கொண்ட மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ்.
Updated On :1 ஜனவரி 2025, 11:21 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, உதகை, குன்னூா், கோத்தகிரி பகுதியில் உள்ள தேவாலயங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் செவ்வாய்க்கிழமை இரவு நேர திருப்பலி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உதகையில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த தூயஇருதய   ஆண்டவா் தேவாலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயா் அமல்ராஜ் தலைமையில்,  பங்கு தந்தை ரவிலாரன்ஸ் முன்னிலையில் உலக அமைதிக்காகவும்,  தமிழகம் மற்றும் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

ட்ரினிட்ரி தேவாலயத்தில் பங்கு தந்தை ஜொ்ரி ராஜ்குமாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில்  நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா். திருப்பலி நிகழ்ச்சிக்கு பின் ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.