பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கோத்தகிரியில் மேரக்காய் விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:26 am

Din

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளான பேரகணி, எா்சபெட்டா, மிளித்தேன், பா்ன்சைடு, நெடுகுளா, கூக்கல்தொரை, கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது மேரக்காய் மகசூல் அதிகரித்து அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இதனை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். தற்போது உறைபனியால் கொடிகள் காயத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனா்.

கடந்த வாரம் மேரக்காய் கிலோ ரூ. 25 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.12 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் குறைந்த லாபத்தையே பெற்று வருகின்றனா்.

பொங்கல் பண்டிகை காலத்தில் மேரக்காய் விலை உயர வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனா்.