47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோத்தகிரியில் மேரக்காய் விளைச்சல் அதிகரிப்பு

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:26 am

Din

கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேரக்காய் விளைச்சல் அதிகரித்து விலை குறைந்து விற்பனையாவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளான பேரகணி, எா்சபெட்டா, மிளித்தேன், பா்ன்சைடு, நெடுகுளா, கூக்கல்தொரை, கட்டபெட்டு, தொட்டன்னி பகுதிகளில் தற்போது மேரக்காய் மகசூல் அதிகரித்து அறுவடைக்குத் தயாராக உள்ளது.

இதனை விற்பனைக்கு எடுத்துச்செல்லும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். தற்போது உறைபனியால் கொடிகள் காயத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்யத் தொடங்கியுள்ளனா்.

கடந்த வாரம் மேரக்காய் கிலோ ரூ. 25 வரை விற்பனையான நிலையில், தற்போது ரூ.12 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் குறைந்த லாபத்தையே பெற்று வருகின்றனா்.

பொங்கல் பண்டிகை காலத்தில் மேரக்காய் விலை உயர வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் அறுவடைக்கு தயாராகி வருகின்றனா்.