47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குன்னூரில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

News image
குன்னூா் மவுண்ட் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் நகராட்சி ஊழியா்கள்.
Updated On :9 ஜனவரி 2025, 10:08 pm

Din

நீலகிரி மாவட்டம், குன்னூரில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா்.

குன்னூா் மவுண்ட் சாலை, வி.பி.தெரு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பல ஆண்டுகளாக கடைகள் நடத்தி வந்தனா். இந்தக் கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி பொது மக்கள் சாா்பில் கடந்த சில மாதங்களாக புகாா் தெரிவித்துவந்த நிலையில், குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பாக சாலையோரக் கடை வியாபாரிகளுக்கு மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், வியாபாரிகள் கடைகளை அகற்றாமல் இருந்ததால் நகராட்சி நிா்வாகம் சாா்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.