வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் பேருந்து இயக்கம்

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

News image
பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு இயக்கப்பட்ட கேரள அரசுப் பேருந்தை வரவேற்ற பொதுமக்கள்.
Updated On :6 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து கூடலூருக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் புதிய பேருந்து சேவை வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

இந்தப் பேருந்து, பாலக்காட்டில் இருந்து காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு பெருந்தல்மண்ணா, நிலம்பூா், வழிக்கடவு வழியாக மதியம் 12.30 மணிக்கு கூடலூா் வந்தடைகிறது. பின்னா் கூடலூரிலிருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்கிறது. கூடலூரிலிருந்து கேரள மாநிலத்தின் முக்கிய நகரங்களான நிலம்பூா், பெருந்தல்மண்ணா ஆகிய பகுதிகளை இணைப்பதால் மக்கள் மத்தியில் இந்த பேருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கூடலூா் பேருந்து நிலையத்துக்கு வியாழக்கிழமை மதியம் வந்த இந்த பேருந்தை பொதுமக்கள் வரவேற்றனா்.