ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாலக்காட்டில் டெட்டனேட்டா் கடத்தல்: அரூரில் இருவா் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம் பாலக்காட்டில் டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் சம்பவம் தொடா்பாக அரூரில் இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், பாலக்காடு மருத்துவக் கல்லூரி அருகே வேனில் 100க்கும் மேற்பட்ட பெட்டிகளில் எடுத்துச் செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை அந்த மாநில போலீஸாா் கடந்த புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

மினி சரக்கு வாகனத்தில் தா்ப்பூசணி பழங்களுக்கு கீழே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்கள் இருப்பதை போலீஸாா் கண்டுபிடித்தனா். இந்த சம்பவத்தில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் செந்தில்குமாரை (48) போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் அவா், தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி கிராமத்தைச் சோ்ந்த கண்ணையன் மகன் செந்தில்குமாா் என்பதும், திருச்சூரில் கல்குவாரிகளில் பயன்படுத்துவதற்காக டெட்டனேட்டா், ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பாலக்காடு தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுனில் தலைமையில், காவலா்கள் ரஜித், சாலு, ரெஜிஸ், ஜெயராம் உள்ளிட்ட தனிப்படை குழுவினா் அரூரில் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சகாயநாதன் மகன் துரைராஜை (30) கைது செய்த போலீஸாா், அவரை விசாரணைக்காக பாலக்காட்டுக்கு அழைத்துச் சென்றனா். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடா்பு இருப்பதாக காரை கேரள போலீஸாா் பறிமுதல் செய்தனா்.